Thursday, 22 March 2012

என் உயிர் மழை

நனைந்து கொண்டிருந்த நவம்பர் மாதத்தில்
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .

குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது 
உன் பார்வைத் தீயினிலே 
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.

உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை 
பாராமல் சென்றது பெண்மை 
என்னிடம் ஏன் இந்த வன்மை 
உன்னில் பிடித்தது-மென்மை.

அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே 
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும் 
தொல்காப்பியனையும் மறந்தேனடி !

சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால் 
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான் 
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !

No comments:

Post a Comment