நனைந்து கொண்டிருந்த நவம்பர் மாதத்தில்
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .
குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது
உன் பார்வைத் தீயினிலே
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.
உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை
பாராமல் சென்றது பெண்மை
என்னிடம் ஏன் இந்த வன்மை
உன்னில் பிடித்தது-மென்மை.
அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும்
தொல்காப்பியனையும் மறந்தேனடி !
சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால்
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான்
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !
நாணத்துடன் நீ புன்னகைத்தது -மின்னலாய்
பளிச்சிட்டது என்னுள் .
குளிர் பொதிந்த என் உடல், மெல்லக் காய்ந்தது
உன் பார்வைத் தீயினிலே
இதமாய் இருந்தது, இருப்பினும் பயமாய் இருந்தது.
உன் பார்வையில் குளிர் காய்ந்த என்னை
பாராமல் சென்றது பெண்மை
என்னிடம் ஏன் இந்த வன்மை
உன்னில் பிடித்தது-மென்மை.
அரைனோடிப் பார்வயினிலே அறைந்தே போனவளே
ஒருநொடிப் பொழுது தான் என்னை நினைத்தே போவாயோ.
ஒரு காப்பியம் இயற்றிடவே வந்தேனடி - உனைப் பார்த்ததும்
தொல்காப்பியனையும் மறந்தேனடி !
சீதையை தேடிச் செல்லும் முன் இவளைக் கண்டிருந்தால்
சற்றே மறந்திருப்பான் , அவனும் முற்றே துறந்திருப்பான்
தெற்றே என தோன்றிற்பினும், பற்றே கொண்டிருப்பான் அவள் பால்.
கற்றே கரைதெளிந்த இராமன் அவன் !
No comments:
Post a Comment