உடுக்கையின் அதிரலில்
உன் உடற்கூடு உடையட்டுமே ,
நெற்றிக்கண்ணின் உக்கிரத்தில்
உமக்கு முக்தி விளங்கட்டுமே .
வேதம் இனி எதற்கு
வேந்தன் துணை இருக்க ,
தேசம் துறந்து வா
ஈசன் நேசம் பெற்றிடவே .
ஏழு பிறவி எடுத்தாயோ
எம்பெருமானை தரிசித்திட ,
ஏமாற்றம் இனி உனக்கில்லை
எந்தை அருள் அறிந்திடுவாய் .
No comments:
Post a Comment