Thursday, 29 August 2013

The Omnipresent - 2


உடுக்கையின் அதிரலில் 
உன் உடற்கூடு உடையட்டுமே , 
நெற்றிக்கண்ணின் உக்கிரத்தில் 
உமக்கு முக்தி விளங்கட்டுமே .

வேதம் இனி எதற்கு 
வேந்தன் துணை இருக்க ,
தேசம் துறந்து வா 
ஈசன் நேசம் பெற்றிடவே .

ஏழு பிறவி எடுத்தாயோ 
எம்பெருமானை தரிசித்திட ,
ஏமாற்றம் இனி உனக்கில்லை 
எந்தை அருள் அறிந்திடுவாய் .

No comments:

Post a Comment